மு. கோபி சரபோஜிகையில் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். தன்னாலும் தமிழிலக்கியத்துக்கு ஒரு கவிதைநூலைத் தந்து விட முடியும் என்ற நம்பிக்கையின் வீக்கம் சீழ் பிடித்து கவிதைச் சந்தையில்இருந்து வாசகனை ஓட வைத்து விட்டது. கவிதைக்கு வந்த இப்படியான சோதனையும்,வேதனையும் மெல்ல மற்ற படைப்பிலக்கியக்க வடிவங்களுக்கும் பரவத் தொடங்கி விட்டன.இந்தச் சூழலில் எந்த சமரசத்திற்குள்ளும் உட்படுத்திக் கொள்ளாமல் படைப்புகளின் மீதுவிமர்சனங்கள் முன் வைக்கப்படும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள்ஒலிப்பது வழக்கமாகி விட்டது. வழக்கொழிய வேண்டிய ஒன்று…