தமிழ்மாதம் என சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சித்திரை மாதம் முழுக்க தமிழ் நிகழ்வுகள் சிங்கப்பூரின் வெவ்வேறு பிரதேசங்களில் அரங்கேறிக்கொண்டிருந்தன.08.04.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி. உமறுப்புலவர் மண்டபத்தின் வாசலில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடக பதாகை வரவேற்றது.. உலகத் திருமறையின் நாயகன் திருவள்ளுவர் மண்டப வாசலில் அமர்ந்திருந்தார். அவரின் கையில் இருந்த ஏட்டில் மல்லிகையும் ரோஜாவும். மண்டபவாசலில் தமிழ் பூத்துக் குலுங்கியது. கூப்பிய கரங்கள் புன்முறுவலுடன் வணக்கம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தன. சிங்கப்பூரில் இயங்கும் ”சியாமா” நிறுவனமும்…