அனூஜ் ஜெயின். சிங்கப்பூர் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள பட்டாம்பூச்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான தன் ஐந்து வருட முனைவர் பட்ட ஆய்வை 2016ன் ஆரம்பத்தில் தேசியப் பல்கலைல் கழகத்தில் முடித்திருப்பவர். காடுகள், வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். புதிய துறையான ‘பயோமிமிக்ரி’ என்று சொல்லப்படும் இயற்கையின் ஆதாரமான வடிவமைப்பில் இருந்து கற்றுக்கொண்டு அதை நகரங்களின் வடிவமைப்பில் கொண்டுவருவதிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு சிங்கப்பூரின் தேசிய பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுக்க ஒரு இணைய வாக்களிப்பு…