எனக்கு 13 வயதிருக்கும். தமிழ்நேசன் சிறுவர் அரங்கத்தில், கட்டுரைகள், குட்டிக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நேரம். தமிழ்நேசன் ஞாயிறு மலரில் சுழல்பந்து என்ற தலைப்பில் பிரசுரமான ஒரு சிறுகதை ஏனோ என்னை அப்படிக் கவர்ந்தது. ஓர் ஆசிரியர் கல்வியில் பிரச்சினையுள்ள ஒரு மாணவர்மீது கோபப்பட்டு பின் அந்த ஆசிரியர் எப்படி உணர்ந்தெழுகிறார் என்பது கதையின் சாரம். அவ்வளவு ஆசையாக அந்தக் கதையைத் திரும்பத்திரும்பப் படித்தேன். இணையம் அறிமுகமாகிய வேளையில் ஜெர்மனி நா.கண்ணன் நடத்தும் மின் தமிழ் குழுமத்தில் எழுதத் தொடங்கிய…