1924ல் சிங்கப்பூரில் பிறந்த செல்லப்பன் ராமனாதன் (S.R.நாதன்) ஆகஸ்ட் 22, 2016ல் தன் 92ம் வயதில் இயற்கை எய்தினார். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தவர், இருமுறை அதிபர் பதவி வகித்தவர், வயதானவர் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சின்ன விஷயத்தால்தான் அவரிடம் முதலில் நான் கவரப்பட்டேன். தமிழ்த்தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் ‘இளையர்களுக்கு, குறிப்பாக நம் இன இளையர்களுக்கு, உங்கள் அறிவுரை என்ன?’ என்று கேட்டார்கள், அவர் அழகான பழகுதமிழில் ‘அவுங்க நெனச்சா எவ்வளவோ செய்யலாம், ஆனா எல்லாத்தையும் வுட்டுட்டு…