‘அசோகமித்திரன்’ என்ற பெயர் தாங்கிய ஒரு நாடகம் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ராஜாமணி என்ற நண்பர், நாடகத்தை எழுதியவர், அதனால் மனமுடைந்துபோகிறார். அவரைத் தேற்றும் விதமாக அசோகமித்திரன் என்ற பெயரைப் பிரபலமாக்க அதையே தன் புனைபெயராக வைத்து எழுத ஆரம்பிக்கிறார் அவரது நண்பர் தியாகராஜன். அவரே கடந்த மார்ச் 23ம் தேதி மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விடிகிற மாதிரி அன்று அசோகமித்திரனின் மறைவுச் செய்தியுடன் தொடங்கியது. லௌகிக வாழ்க்கையின் ஒதுக்கிவிட இயலாத…