![](https://serangoontimes.com/wp-content/uploads/2024/06/1-30.jpg)
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அதன் 100வது இதழை எட்டியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது, மலைப்பையும் தருகிறது. பொழுதுபோக்கு, சினிமா போன்ற பிரபலமான அம்சங்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகள், வரலாறு, மொழி, பண்பாடு போன்ற அம்சங்களில் மட்டுமே அது கவனம் செலுத்தி வருவது எனது மகிழ்ச்சிக்குக் காரணம். மலைப்புக்கும் அதுவே காரணம். ஜனரஞ்சகமான அம்சங்கள் இல்லாமலும் தாக்குப் பிடிக்கமுடியும் என்பதை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ உணர்த்தியிருக்கிறது.
அதனைச் சாத்தியமாக்கிய தொழில் முனைவரும் தமிழ் ஆர்வலருமான திரு.முஸ்தபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. தொண்டூழிய அடிப்படையில் சஞ்சிகையைத் தொய்வில்லாமல் தொடர்ந்து வெளியிட்டுவரும் ஆசிரியர் குழுவுக்கு எனது வாழ்த்துகள். தமிழை நேசிப்பவர்கள், வாசிப்பவர்கள், சுவாசிப்பவர்கள் போன்றோர் ஒரு நேர்க்கோட்டில் இணைந்ததால் இந்தச் சாதனை சாத்தியமாகி உள்ளது.
நூறு, ஆயிரத்தை எட்டட்டும். அதற்காக நம் கைகள் தட்டட்டும்!