0,00 SGD

No products in the cart.

நினைவோ ஒரு பறவை தக்குவா பா தமிழ்க் கல்வெட்டு

தக்குவா பாவில் தமிழ் வணிகர்கள் பலங்கொண்டக் குழுவினராக வாழ்ந்திருக்கிறார்கள் என்று கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது

சிங்கப்பூரில்கள்ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

பிரிட்டிஷ் மலாயாவின் கள்ளுத்தொழில், தோட்டப்புறப் பொருளாதாரத்தை பாதித்த ஒரு பிரச்சினையாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

ரப்பர் மனிதர் | அழகு நிலா

மரபு சாரா ஆற்றல் (Non-Conventional Energy or Renewable Energy) துறையைப் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் அத்துறையில் ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சி அனுபவமும் கொண்டிருந்த பேராசிரியருடைய பல பரிந்துரைகளைக் கேட்டு ‘பைத்தியக்காரர்’ என்று உடனிருந்தவர்களே சிரித்ததுண்டு. ஆனால், இன்று உலக நாடுகள் மரபு சாரா எரிபொருட்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பி உள்ளன. இவரைப் போன்ற மனிதர்கள் தொடக்கத்தில் இழிவுபடுத்தப்படுவதும் பின்பு சாதனையாளராக கொண்டாடப்படுவதும் புதிதல்ல. சிங்கப்பூரிலும் அப்படி ஒருவர் இருந்திருக்கிறார். ‘பைத்தியக்கார ரிட்லி’, ‘ரப்பர் ரிட்லி’ என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டு இன்று ‘மலாயா ரப்பர் தொழில் துறையின் தந்தை’ என்று போற்றப்படும் Henry Nicholas Ridley தான் அவர்.

இரு தெருக்களின் கதை | நகர்மயமாதலும் நீடிக்கும் நினைவுகளும் | முனைவர் அ.வீரமணி

ஒரு பழைய சம்பவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. பஃப்ளோ சாலையை ஒட்டியிருந்த ஒரு சந்தில் நானும் என் அக்காவும் விளையாடிக்கொண்டிருந்தோம். எங்கள் வீடு அங்குதான் இருந்தது. எனக்கு அப்போது சுமார் இரண்டு வயது இருக்கும். கணுக்கால், இடுப்பு, கழுத்து, மணிக்கட்டு, விரல்கள் என்று உடலெங்கும் நகைநட்டுகளோடு இருந்த நான் தங்கத்தின் மதிப்பு தெரியாமல் மோதிரம் ஒன்றைக் கழற்றி விளையாடினேன். அது சடக்கென உருண்டோடி தரையில் இருந்த ஒரு துளைக்குள் நுழைந்து மறைந்தது. என் ஒன்பது வயது அக்கா அத்துளைக்குள் விரலை நுழைத்து மோதிரத்தை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றாள், ஆனால் பலிக்கவில்லை. இறுதியில் அக்கம்பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொற்கொல்லர் கடைகளில் இருந்தவர்களின் உதவியை நாடினாள். கொஞ்சநேரத்தில் பஃப்ளோ சாலையிலிருந்த மொத்த பொற்கொல்லர் சமூகமும் மோதிர மீட்புப் பணிக்காகத் திரண்டுவிட்டது. பஃப்ளோ சாலை மக்களிடையே 1940களிலிருந்த சமூக உணர்வை விளக்க என் தாய் இச்சம்பவத்தை விவரிப்பது வழக்கம். பல்லாண்டுகள் கழித்து, ஒரு பதின்ம வயதுப் பையனாக, பள்ளிக் கலாச்சார விழாவுக்காக மேடைப்பின்னணித் திரைச்சீலை சேகரிக்கச் சிங்கப்பூரில் சுற்றியலைந்த நான், நோரிஸ் சாலையிலிருந்த மூன்றுமாடிக் கட்டடம் ஒன்றின் நெட்டுக்குத்தான படிகளில் ஏறினேன். அக்கட்டடத்தின் மொட்டைமாடியில், தகரக் கூரை வேயப்பட்டிருந்த மரக்கொட்டிலில், இருந்த தமிழ்ச் சமூக அமைப்பொன்றின் தலைமையகம் என்னை வரவேற்றது. புன்னகையுடன் அதிலிருந்து வெளிப்பட்ட ஒருவர் என்னை வரவேற்று அங்கு ஒரு மூலையிலிருந்த ஐந்து திரைச்சீலைகளை பள்ளிக்கு எடுத்துச்செல்லலாம் என்று என்னிடம் சொன்னார். அவர் என் அடையாள அட்டையைக் கேட்கவில்லை, பள்ளியின் பெயரைக் கேட்கவில்லை. இத்தனை நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவரவேண்டும் என்று தேதிகூடக் குறிக்கவில்லை. என்னைப்பார்த்து, சமூகத்தின் இளையருக்காகவும் இளையர் மேம்பாட்டுக்காகவும் தன் அமைப்பு அனைத்தையும் கொடுக்கும் என்றார். அவர்தான் மா.சி. வீரப்பன் என்பது எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது. இவ்வாறாக பஃப்ளோ சாலை, நோரிஸ் சாலை இவ்விரு சாலைகளும் எவ்வாறு என் சொந்த வாழ்க்கை அனுபவப் பின்புலத்தில் அமைந்துள்ளனவோ அதுபோலவே சிங்கப்பூரில் தமிழர்தம் சமூக, அடையாள உணர்வுகளை பொருள்பொதிந்த ஒன்றாக ஆக்கும் வகையிலும் அமைந்துள்ளன. கடந்த அறுபதாண்டுகளில் நகர மறுசீரமைப்பினாலும் இன்னபிற அரசாங்கக் கொள்கைகளினாலும் இவ்விரு சாலைகளும் மாற்றங்களை அடைந்துள்ளன. மாற்றங்கள் மேம்பாட்டைக் கொண்டுவருகின்றன என்று நாம் இயல்பாக அனுமானித்துக் கொள்கிறோம். ஆயினும் நாகரிகம், முன்னேற்றம், நவீனம் இவற்றைக் குறித்த ஆய்வுகள் அண்மைக்காலத்தில் வேறுவிதமாகவும் பேசத் தொடங்கியுள்ளன. இடம் தனது தனித்தன்மைக்கு அழிவு வரும்போது அவ்வழிவையே குழப்பிவிடுகிறது. ஊடுருவ ஏதுவான இடத்தின் எல்லைகள் வரலாற்று அனுபவங்களை உள்வாங்க இடமளிக்கின்றன. தனிமனித நினைவுகளில் சில தருணங்களைத் தேவைக்கேற்ப மீட்டுக்கொள்ளும் வகையில் தக்கவைக்கின்றன.

ஆம், சிங்கப்பூரில் சிங்கம் இருந்தது! | சிவானந்தம் நீலகண்டன்

தனது தலைமைத்துவத்தின் முத்தாய்ப்பாக லீ செய்தது தனக்கு அடுத்த தலைமையைத் தயார் செய்ததுதான். எவ்வளவோ பிரயாசைப்பட்டு சிங்கப்பூர் என்ற சிறு தீவுக்கு உலக அளவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியபின் அந்தத் தொடர் ஓட்டத்தில் அடுத்ததாகக் குறுந்தடியை வாங்கிக்கொண்டு ஓடுபவர் சரி இல்லாமல் போய்விட்டால் அது வெற்றியில் முடியாமற் போய்விடும் என்பதை லீ நன்றாக உணர்ந்தே இருந்திருக்கிறார். பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு எளிதாக அவருக்கு இருந்துவிடவில்லை. அதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது.

ஒல்லாந்தர் (டச்சு) வருகை | வரலாறு

ங்களின் கலங்களில் நிரப்பிக் கொண்டு அவர்கள் திரும்பும் சமயம் பொழுது சாய்ந்துவிடுகிறது. படர்ந்து விட்டிருந்த இருளில் தங்களின் கப்பல் நிற்கும் திசை அவர்களுக்குப் புலப்படவில்லை. தங்களின் படகிலிருந்து சமிஞ்ஞைகளைக் காட்டி தங்களுடன் வந்த பயணக்குழுவினரைத் தொடர்பு கொள்ள முயல்கிறார்கள். ஆனால் பதிலுக்குக் கப்பலிலிருந்து துப்பாக்கி வெடித்தோ, விளக்குகள் காட்டியோ எதிர் சமிஞ்ஞைகள் எதுவும் வரவில்லை.

சுவை இன்பத்தின் எட்டுப் பேருரைகள் – ஷாநவாஸ்

இருவேறு காலத்தின் குணாதிசயங்களும் நிலவி வந்தன. அந்தச் சமயத்தில் சமையற்கலை மற்றும் உணவைக் கொண்டாடியது பற்றிய செய்திகளில் சீனத்தின் நவீன யுகம் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு இருக்கிறது. ஆயினும் பல வரலாற்று ஆய்வாளர்களும் 1000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலமே நவீன சீனத்தின் ஆரம்பம் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

பொன்விழாவில் மேடையேறிய தமிழவேள்! – எம்.கே.குமார்

இருபத்தியொரு வயது இளைஞனாக, சிங்கப்புரா துறைமுகத்தை கப்பலில் வந்தடையும் திரு. கோ.சாரங்கபாணியும், உடன்வரும் தமிழ்க் கூலிகளுமாகத் தொடங்கிய நாடகத்தில் தன்னோடு வந்த கூலி வசந்தபாலனை கங்காணி தாக்கி அழைத்துச் செல்ல, கோபக்கார இளைஞனாக கங்காணியை எதிர்த்து நிற்பவராகவும், சமரசமில்லாத கொள்கை வீரனாக வேலையில் இருந்ததற்காக 'முன்னேற்றம்' இதழிலிருந்து வெளியேற்றப்பட்டவராகவும், சிற்றுண்டிக் கடை நடத்தும் சீனக் கைம்பெண்ணின் மகளான நியோவிடம் புரட்சிவாதியாக ஆரம்பித்து காதல்வாதியாகக் குழையும் இளைஞனாகவும், பெரியாரின் வழியில் நின்றும், நேதாஜியின் பணியோடு பங்கு கொண்டவனாகவும், 'தமிழ் முரசு' இதழையும் 'இந்தியன் மெயில்' ஆங்கிலப் பத்திரிகையயும் தோற்றுவித்த லட்சியவாதியாகவும், சாதி மதம் அற்ற தமிழினம் ஒன்றை அடைய முயற்சித்தவராக, தமிழர் திருநாளைக் கொண்டாடியவராக, சீனப் பெண்ணை மணந்தாலும் தமிழருக்காக, தமிழுக்காக மலேயா முழுவதும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவராக, குடியுரிமை பெற தமிழர்களை உந்தியவராக, உடன் இருந்தோர் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பின்னும் உற்ற நண்பர்களும் மறைந்த பின்னும் தனிமையிலும், 'வெஞ்சமரில் வீழ்ந்தாலும் தமிழ் என்றும் வாழும்' என்ற திடமான எண்ணத்தோடும் வேட்கையோடும் அச்சு எந்திரத்திற்கு முன் நிற்கும் இறுதிக்காட்சிவரை ஏறக்குறைய இருபத்திரண்டு காட்சிகளாலும் இரு காணொலிகளாலும் கோ.சாவின் வாழ்க்கையை நச்சென்று இயக்கியிருந்தார்.

மறைந்து போன ஜாலான் மயானம்

தட்டுமுட்டுப் பொருட்கள், பழைய துணிமணிகள் முதலியவற்றை அப்புறப்படுத்துவதற்கு சாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ள ‘சல்வேஷன் ஆர்மி’க்குச் செல்வது வழக்கம். அங்குச் செல்லும்போது, ‘ஜாலான் மயானம்’ என்னும் சாலையைப் பார்ப்பதுண்டு. அப்பர் சாங்கி ரோடு நார்த்திலிருந்து பிரிந்து செல்லும் சிறு சாலைதான் ‘ஜாலான் மயானம்’. ஆனால் அதன் வரலாறு என்ன? ஏன் அந்தச் சாலைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது? என்பதைப் பற்றி எல்லாம் சிந்தித்தது இல்லை. அண்மையில் அங்கு சென்றபோது, அந்தச் சாலையின் சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை அகத்திலுள் வேரூன்றியது. தமிழில் சாலையின் பெயர் இடம்பெற்றிருந்ததே அதற்கு முக்கியக் காரணம். சிங்கப்பூரில் ஒருசில சாலைகள் மட்டுமே தமிழில் உள்ளன அல்லது தமிழர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்களின் பூர்வீக ஊர்களைக் குறிக்கும் சாலைகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளன.

வரலாற்று உணர்வு இல்லாத மக்களுக்கு அடையாளமும் கிடையாது- முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்

எந்தவொரு நாகரிகத்திற்கும் முழுமையாகவோ பகுதியாகவோ அதன் தொடர்ச்சி அறுபடுவதற்கான வாய்ப்புண்டு. ஒரு நாடும் அதன் அடையாளமும் நீடித்தாலும், அதன் அரசியல் என்றென்றும் நீடிக்காது. இது வரலாற்றின் விதி. ஆயினும்கூட, தக்க சமயத்தில், சமுதாயப் பிரச்சனைகளை நாம் கண்டறிந்து சரிசெய்ய முயற்சித்தால் பேரழிவைத் தடுக்க முடியும். நமது பலமாகக் கருதப்படும் பன்முகத்தன்மை பலவீனமாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. அடையாள நெருக்கடி, சமூக ஒத்திசைவில் சரிவு, இன, மத மற்றும் மொழி அடிப்படையிலான வெறுப்பு போன்றவை எந்தவொரு நாட்டின் திடநிலையையும் பாதிக்கக்கூடும். ஆகவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டே முன்னகர்வதுதான் வரலாறு மீண்டும் நிகழாமலிருக்க ஒரேவழி.

நினைவோ ஒரு பறவை – காலச்சக்கரம் – கனடா மூர்த்தி

இந்தியர்களின் கலாச்சார பலத்தினை வெளிக்காட்டும் பெரும் கண்காட்சி ஒன்றை ஆறுமாத காலம் நடத்திடும் திட்டத்தை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 2005ம் ஆண்டு வாக்கில் முன்னெடுத்திருந்தது. "தென்கிழக்காசியவில் இந்தியக் கலாச்சாரங்களின் தாக்கம்" (Early Indian Influences in Southeast Asia) என்பதே அக்கண்காட்சியின் கருப்பொருள். "தென்கிழக்காசியாவில் 13ம் நூற்றாண்டுக்கு முன்னரான இந்திய கலாச்சாரத்தின் வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்டாடுவதே அந்தக் கண்காட்சியின் நோக்கம்" என்பதையும் நூலக வாரியம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில்தான் கண்காட்சிக்கான ஆய்வு மற்றும் வடிவமைப்புப் பணிகளுக்காகத் தேசிய நூலகத்தில் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 'காலச்சக்கரா'வைப் பற்றிய நினைவுகள் வரும்போது, எனது வாழ்க்கையின் பெருமிதங்களில் ஒன்று சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில் சிலகாலம் பணியாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியமைதான்" என்றும் சிறு கர்வத்துடன் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதும் உண்டு.

சேஞ்ச் அலி – முகத்துவாரம் – எம்.ஏ.முஸ்தபா

கண்முன்னே விரிந்து கிடக்கும் கடல் பரப்பும் அதைத் தொட்டுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் நகர கால்வாய் நதி நீர் சேரும் முகத்துவாரத்திலிருந்து எலிசெபத் வாக்கில் நடந்து கொண்டே நதியும், கடலும் சேர்ந்து காயல் பிறப்பெடுக்கும் முத்துப்பேட்டை முகத்துவாரத்தை எண்ணிப்பார்க்கிறேன். ‘எத்திசை செலினும் அத்திசைச் சோறே’ சங்க இலக்கியப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தச் சிறிய நிலப்பரப்பு பலமடங்கு நிலப்பரப்பு கொண்ட தேசங்களின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணியாக உருவானது எப்படி? எண்ணித் தீராத பேதங்களைக் கொண்ட பலதேச மக்களும் ஒன்றாய்க் கலந்து ஒற்றுமை கயிற்றைப் பிடித்தது எப்படி?

சேஞ்ச் அலி – எம் ஏ முஸ்தஃபா

என்னிடம் நிறையபேர் எந்த கரன்சியில் முதலீடு செய்வது என்று ஆலோசனை கேட்பார்கள். நான் அவர்களிடம் உங்களுக்குப் பாதுகாப்பான கரன்சி சிங்கப்பூர் கரன்சிதான் என்று சொல்லுவேன். பொருளாதாரத்தில் ஓர் அளவுகோல் இருக்கிறது. எந்த நாட்டில் எல்லாம் வைப்புத்தொகைகான வட்டி குறைவாக இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்று அர்த்தம். எந்த கரன்சியில் வட்டி அதிகமாக இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் வலிமையிழந்திருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு இந்திய ரூபாய், இலங்கை ரூபாய், பிலிப்பைன்ஸ் ரூபாய் இதிலெல்லாம் வங்கியில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக வரும். ஆனால், கரன்சி வலிமையிழக்கும்போது நஷ்டம்தான் ஏற்படும். சிங்கப்பூர் கரன்சிக்கு வட்டி குறைவு. ஆனால், நஷ்டம் ஆகாது. அதற்கு வலுவான கட்டமைப்பும் மிகச் சிறந்த ஆளுமைகள் சிங்கப்பூர் நிதித்துறை, பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்ததுதான் காரணம். - எம் ஏ முஸ்தபா அவர்களின் அனுபவப் பகிர்வில் வெளிவரும் 'சேஞ்ச் அலி' தொடர் பகுதியை முழுமையாகப் படிக்க 'தி சிராங்கூன் டைம்ஸ் இதழ் அல்லது இணையப் பதிப்புக்கு சந்தா செலுத்துங்கள்.

பதினாறாம் நூற்றாண்டு சிங்கப்பூர்

மலாக்காவின் நிலமும் அதில் வாழும் அடிமைகளும் போர்த்துக்கீசியர்களுக்கே சொந்தம் என்ற புது விதி அமலுக்கு வருகிறது. மலாய் மன்னர்கள் ஆட்சியிலிருந்தபோது மலாக்காவிலிருந்த அடிமைகளுக்குத் தங்களின் எஜமானர்களுக்குச் சேவை செய்த நேரம் போக மற்ற சமயங்களில் வேறு பணிகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டும் சுதந்திரம் இருந்தது. இந்தப் புது விதி அவர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகிறது. அடுத்து, வணிகத்தில் போர்த்துக்கீசியர்களின் அதிகாரம் மேலோங்குகிறது. இது ஆசிய வணிகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. - ஹேமா எழுத்தில் 'ஆதிநிலத்து மனிதர்கள்' தொடரை முழுமையாகப் படிக்க 'தி சிராங்கூன் டைம்ஸ்' அச்சிதழ் அல்லது இணையப் பதிப்புக்கு சந்தா செலுத்துங்கள்.

ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்

நூல்கள் வெளியிடுவது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்குப் புதிதல்ல, சுமார் 150 ஆண்டுகளாகப் பழக்கமான ஒன்றுதான். ஆனால், கடந்த தொழிலாளர் தினத்தன்று (மே 1, 2021) சிங்கையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றை அந்த நீண்ட...

பழங்காலத்தில் விபத்துக்குள்ளான கப்பல்களின் அபூர்வப் பொருட்கள் மீட்பு

சிங்கப்பூரில் சீன மட்பாண்டங்களும் பல்வேறு கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 14, 17-ம் நூற்றாண்டுகளில் விபத்துக்குள்ளான 2 கப்பல்களின் பொருட்கள்.

ஹேமாவின் ‘வாழைமர நோட்டு’ பற்றி அனிஷா மரைக்காயர்

வாழைமர நோட்டு ஹேமா வாசிப்பு: அனிஷா மரைக்காயர் ஊரில் ‘ஒம்பது ரூவா நோட்டு' என்றால் ஒண்ணுக்கும் உதவாத செல்லாத மனிதர்களை குறிக்கும்சொல். ஆனால், இந்த ‘வாழைமர நோட்டு' என்பது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் அரசாங்கத்தால் சபா-சரவாக்-புருணை-சிங்கப்பூர் போன்ற அந்தக் கால ஒன்றுபட்ட மலேயா தேசத்தில் புழக்கத்தில் கொண்டு வரப்பட்ட கரன்சி. இரண்டாம்...

அயல் பசி – ஷாநவாஸ்

Food comes first, Then Morals - Berthold Brechet (1898-1947) ஒவ்வொரு நாளும் உணவுகளைப் பற்றிய தகவல்கள் நம்முன் வந்து குவிந்துகொண்டேயிருக்கின்றன. இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடாதீர்கள்  என்று முதல்நாள் சாப்பிடச் சொன்ன உணவுகளை மறுநாள் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள் சத்துணவு நிபுணர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும். ஒரே சுதியில் ஆகா ஓகோவென்று புகழப்பட்ட உணவுகள் மறுநாள் பட்டியலிலிருந்து ஏதோ ஒரு காரணத்துக்காக நீக்கப்படுகின்றன. சென்ற நூற்றாண்டில் ஆலிவ்...

இன்றைய நிகழ்ச்சி: இந்தோனேசியத் தமிழர் குமாரசாமி குறித்த உரை

இன்று இரவு எட்டு மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) மேதன் அர்பன் ஃபோரம் (Medan Urban Forum) ஒருங்கிணைக்கும் வெபினார் நிகழ்வில் இந்தோனேசியத் தமிழர் குமாரசாமி அவர்களைப் பற்றி முனைவர் அ.வீரமணி உரையாற்றுகிறார். "1976-ம் ஆண்டில்...

தொடரும் புன்முறுவல்! பேராசிரியர் அ.வீரமணி

சிங்கப்பூரில் முருகனின் புன்முறுவல் - பகுதி 2 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரவை 1977-ம் ஆண்டு முதல் 'சிங்கப்பூரில் தமிழும் தமிழிலக்கியமும்' என்ற ஆய்வரங்க மாநாட்டுத் தொடரை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வந்தது. அந்த...

பினாங்கு கோலாலம்பூர் பயணம்- சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி

சிங்கை- ஜுஹர் பிரயாணக் கும்மி என்ற இந்த கும்மிப் பாடல் அடியக்கமங்கலம் செய்குமுகமது பாவலர் அவர்களால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. சிங்கை, மலேசியாவின் அழகையும் செழிப்பையும் கும்மி வடிவில் சொல்லும் பாடலை விளக்கும்...

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி- கண்டவர் மெச்சிடும் கனகாலயம்- சுல்தான் அபுபக்கர் பள்ளி

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் அடியக்கமங்கலம் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப் பார்த்து வியப்பது போல கும்மி...

சிங்கப்பூரா எனும் சிம்மாதனம்

ஆதிநிலத்து மனிதர்கள் - 3 ராணி பரமிசுரியின் மகளை மணந்து நெடுநாட்கள் பெந்தானிலேயே தன் ஆசை மனைவி வான் ஶ்ரீபினியுடன் பொழுதுகளைக் கழிக்கும் சங் நீல உத்தமாவிற்கு அங்கிருக்கும் சிற்றாறுகளையே மீண்டும் மீண்டும் பார்த்து...

கடந்த பாதைகளின் சுவடுகள் – புக்கிட் தீமா ரயில் நிலையம்

இளையர் பக்கம்: ரியாசத் அலி காட்டுக்குள் இட்டுச் செல்லும் ரயில் பாதை. பயணிகளின் படபடப்போ அவசரமோ  இல்லை. கிளமெண்டி சாலைக்குக் கீழே அமைந்துள்ள தண்டவாளங்கள் எங்கு செல்கின்றன? அவற்றின் வரலாறு என்ன? தற்போது வெறிச்சோடிக்...

ருசி பேதம்  – ஷாநவாஸ் 

இதுவரை  மனிதகுலத்தை  தாக்கிய கொள்ளை நோய்கள்  தலைகீழ் மாற்றங்களை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்தியிருக்கின்றன. உணவுக் கலாசாரத்தில் கொள்ளை நோய்களும் போர்களும் ஏற்படுத்திய வடுக்கள் வரலாறுநெடுகிலும் காணக் கிடைக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து, மக்கள்தொகை மிக அதிகமான அளவை எட்டிய  பதினான்காம் நூற்றாண்டுவரை இறைச்சியும் பால் பொருட்களும் தனி நபர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்திருக்கின்றன. பெரும்பாலும் தானிய உணவுகளையே...

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி: சிராங்கூன் குதிரைப் பந்தய மைதானத்திலிருந்து ஜோகர்

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி நூல் செய்கு முகமது பாவலரால் 1910-ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜுஹரிலிருந்து சிங்கை வந்து சேரும் பாவலர், சிங்கையின் அதிசயங்களை சுற்றிப்பார்த்து வியப்பது போல கும்மி வடிவில் இந்த...

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி: தர்காக்கள், மலைகள் சூழ் சிங்கை

1910ம் ஆண்டு எழுதப்பட்ட சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி, செய்கு முகமது பாவலர் என்பவரால் இயற்றப்பட்டது. இதன் முதல் பகுதியில் (சுட்டி கட்டுரையின் இறுதியில்) தன் நண்பரும் புரவலருமான பீனாமூனாவையும் அவரது ஷாப்புக்...

சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி: நூலாக்கமும் புரவலர் கடையும்

சிங்கைக்கும் ஜுஹருக்கும் இடையேயான பெரும் தாம்போதி 1919ம் ஆண்டுதொடங்கி 1924ம் ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது. அப்படி என்றால் அதற்கு முன் வாழ்ந்த மக்கள் ஜுஹருக்கும் சிங்கைக்குமிடையே எப்படி சென்று வந்தார்கள், வழியில் என்னென்ன...

சீனப் புத்தாண்டின் கதை!

பிற ஆசிய நாடுகளின் புத்தாண்டைப் போலவே சீனப் புத்தாண்டும் நிலவின் சுழற்சியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. சீனர்கள் மத்தியில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்த 15 நாள் விழாக் கொண்டாட்டங்கள் களைகட்டும். ஜனவரி...

தேக்காவில் தலைப்பாகையுடன் தலைநிமிரும் தமிழர் வரலாறு

தேக்காவில் தலைப்பாகை அணிந்தவாறு மிடுக்குடன் மாட்டு வண்டியை ஒருவர்  ஓடுகிறார். அதனைச் சித்திரிக்கும் மரபுடைமைச் சிலை அண்மையில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாண்டு நம்பவர் 2ஆம் தேதி பொதுமக்களின் பார்வையில் முதன்முறையாகத் தென்பட்ட அந்தச் சிற்பம்,...

சிங்கப்பூரின் கதை!

காலனியாதிக்க காலத்துக்கு முந்தைய சிங்கப்பூரின் வரலாறு அதிகம் எழுதப்படாததாகவே உள்ளது. கிபி 3-ம் நூற்றாண்டில் சீனப் பயணி ஒருவர் ‘புலோசங்’ – தீபகற்பத்தின் முனை என்று குறிப்பிடுவது சிங்கப்பூரைத்தான் என்று கருதும் ஆய்வாளர்கள்...

அதிவினோத குதிரைப் பந்தய லாவணி!

சிங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வியல் குறித்த எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. முதன்முதலில் படகில் பயணம் செய்து சிங்கையை அடைந்த தமிழ் பயணிகளின் வாழ்க்கையை கண்முன் காட்சிகளாக விரிக்கிறது 1893ம் ஆண்டு வெளியான ‘அதிவினோத...

அழிக்க முடியாத ரப்பர் மன்னர்கள்!

மலாய் தீபகற்பம் அசுர வளர்ச்சி காண்பதற்கு மிக முக்கிய காரணமான பணப் பயிர்களில் தலையாயது ரப்பர். எந்த பயனும் இல்லை என்று ஒரு கட்டத்தில் ஐரோப்பியர் கைவிட்ட மலாக்கா பகுதியில் பணப் பயிர்கள்...

சிங்கப்பூர் புதிர் கல்வெட்டு!

பசேய் பகுதியைச் சேர்ந்த துன் ஜனா கதிப் என்பவர் தன் இரு உதவியாளர்களுடன் சிங்கபுராவுக்குச் சென்றான். ஒரு நாள் மாலை மன்னரின் அரண்மனைக்கு அருகே துன் மற்றும் அவரது உதவியாளர்கள் உலவிக்கொண்டு இருந்தார்கள்....

இந்தியத் தொடர்பை நினைவில் மீட்டல்

  அப்பாவிகளைப் படுகொலை செய்த ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க நான் சமீபத்தில் மதிய உணவு உண்ண நேரிட்டது. சிங்கப்பூரிலுள்ள ஓர் உயர்தர விடுதியின் உணவகத்தில் அது நடந்தது. ‘பிரிட்டிஷ் பேரரசு’ என்ற கருப்பொருளில் அவ்வுணவகத்தின் வடிவமைப்புகள்...

ஆய்வுக் கட்டுரை – சிவாநந்தம் நீலகண்டன்

முன்னுரை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மலாயாவிற்குத் தமிழர் புலம்பெயர்வு இருந்தபோதிலும் 19ம் நூற்றாண்டின் முற்பாதியில் சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா ஆகிய நீரிணைக் (ஸ்ட்ரெயிட்ஸ்) குடியேற்றப்பகுதிகளில் அடிமைமுறை ஒழிப்பும், பிறகு தொடர்ந்த பொருளாதார வளர்ச்சியை ஒட்டி...