அப்பாவிகளைப் படுகொலை செய்த ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க நான் சமீபத்தில் மதிய உணவு உண்ண நேரிட்டது. சிங்கப்பூரிலுள்ள ஓர் உயர்தர விடுதியின் உணவகத்தில் அது நடந்தது. ‘பிரிட்டிஷ் பேரரசு’ என்ற கருப்பொருளில் அவ்வுணவகத்தின் வடிவமைப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதன் அலங்காரம் காலனித்துவக் காலத்தின் நினைவேக்கத்தை எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. உணவும் சேவையும் மிக நன்றாகத்தான் இருந்தது, அதைக்குறித்து எனக்கு எந்தப் புகாரு மில்லை. சாப்பிட்டு முடிக்கும்போது, உணவருந்திக் கொண்டிருந்தவர்களை, சட்டகமிட்டுத் தொங்கவிடப்பட்ட இடத்திலிருந்து ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ஒளிப்படத்தில்…