சிங்கைக்கும் ஜுஹருக்கும் இடையேயான பெரும் தாம்போதி 1919ம் ஆண்டுதொடங்கி 1924ம் ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது. அப்படி என்றால் அதற்கு முன் வாழ்ந்த மக்கள் ஜுஹருக்கும் சிங்கைக்குமிடையே எப்படி சென்று வந்தார்கள், வழியில் என்னென்ன பார்த்தார்கள், கப்பல்களும் படகுகளும் கடலுக்குள் செய்த வித்தைகள் என்ன என்பதை கும்மி வடிவில் சிங்கை ஜுஹர் பிரயாணக் கும்மி சொல்கிறது. கும்மிப் பாடல்கள் பெரும்பாலும் எளிய மக்களின் இசை வழி கருத்துப் பரிமாற்றமாகவே இருந்திருக்கின்றன. வழிநடைச் சிந்துக்கு ஒரு கட்டு உள்ளதைப் போலவே…