என்னிடம் நிறையபேர் எந்த கரன்சியில் முதலீடு செய்வது என்று ஆலோசனை கேட்பார்கள். நான் அவர்களிடம் உங்களுக்குப் பாதுகாப்பான கரன்சி சிங்கப்பூர் கரன்சிதான் என்று சொல்லுவேன். பொருளாதாரத்தில் ஓர் அளவுகோல் இருக்கிறது. எந்த நாட்டில் எல்லாம் வைப்புத்தொகைகான வட்டி குறைவாக இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்று அர்த்தம். எந்த கரன்சியில் வட்டி அதிகமாக இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் வலிமையிழந்திருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு இந்திய ரூபாய், இலங்கை ரூபாய், பிலிப்பைன்ஸ் ரூபாய் இதிலெல்லாம் வங்கியில் முதலீடு செய்தால் வட்டி அதிகமாக வரும். ஆனால், கரன்சி வலிமையிழக்கும்போது நஷ்டம்தான் ஏற்படும். சிங்கப்பூர் கரன்சிக்கு வட்டி குறைவு. ஆனால், நஷ்டம் ஆகாது. அதற்கு வலுவான கட்டமைப்பும் மிகச் சிறந்த ஆளுமைகள் சிங்கப்பூர் நிதித்துறை, பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்ததுதான் காரணம்.
– எம் ஏ முஸ்தபா அவர்களின் அனுபவப் பகிர்வில் வெளிவரும் ‘சேஞ்ச் அலி’ தொடர் பகுதியை முழுமையாகப் படிக்க ‘தி சிராங்கூன் டைம்ஸ் இதழ் அல்லது இணையப் பதிப்புக்கு சந்தா செலுத்துங்கள்.