சிங்கப்பூரில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இன்று (ஜூன் 21) முதல் உணவு மற்றும் பானம் (எஃப் & பி) நிறுவனங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பேர் மட்டுமே குழுவாக அமரலாம். குழு உடற்பயிற்சி வகுப்புகள் போன்ற பிற செயல்பாடுகளும் சில கட்டுப்பாடுகளோடு இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. இதுபற்றி உங்களிடம் உள்ள சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…