தேக்காவில் தலைப்பாகை அணிந்தவாறு மிடுக்குடன் மாட்டு வண்டியை ஒருவர் ஓடுகிறார். அதனைச் சித்திரிக்கும் மரபுடைமைச் சிலை அண்மையில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாண்டு நம்பவர் 2ஆம் தேதி பொதுமக்களின் பார்வையில் முதன்முறையாகத் தென்பட்ட அந்தச் சிற்பம், அப்பகுதியில் பிரவலாக இருந்த கால்நடைகளின் வர்த்தகத்தையும் அதற்கு பயன்படுத்தப்பட்ட எருமை மாடுகளையும் நினைவுகூர்கிறது. பஃப்ளோ சாலைக்கும் சிராங்கூன் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் புளோக் 663க்கு முன்புறம் சிலை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மாட்டு வண்டிகள் சிங்கப்பூரின் சாலைகளில் வலம் வந்தன. 20ஆம்…