எந்தவொரு நாகரிகத்திற்கும் முழுமையாகவோ பகுதியாகவோ அதன் தொடர்ச்சி அறுபடுவதற்கான வாய்ப்புண்டு. ஒரு நாடும் அதன் அடையாளமும் நீடித்தாலும், அதன் அரசியல் என்றென்றும் நீடிக்காது. இது வரலாற்றின் விதி. ஆயினும்கூட, தக்க சமயத்தில், சமுதாயப் பிரச்சனைகளை நாம் கண்டறிந்து சரிசெய்ய முயற்சித்தால் பேரழிவைத் தடுக்க முடியும்.
நமது பலமாகக் கருதப்படும் பன்முகத்தன்மை பலவீனமாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. அடையாள நெருக்கடி, சமூக ஒத்திசைவில் சரிவு, இன, மத மற்றும் மொழி அடிப்படையிலான வெறுப்பு போன்றவை எந்தவொரு நாட்டின் திடநிலையையும் பாதிக்கக்கூடும். ஆகவே வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டே முன்னகர்வதுதான் வரலாறு மீண்டும் நிகழாமலிருக்க ஒரேவழி.