சிங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வியல் குறித்த எத்தனையோ நூல்கள் வந்திருக்கின்றன. முதன்முதலில் படகில் பயணம் செய்து சிங்கையை அடைந்த தமிழ் பயணிகளின் வாழ்க்கையை கண்முன் காட்சிகளாக விரிக்கிறது 1893ம் ஆண்டு வெளியான ‘அதிவினோத குதிரைப் பந்தய லாவணி’ என்ற சிறு நூல். இரங்கநாத தாசன் என்பவர் இயற்றிய இந்த நூல், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி நாகை வந்து கப்பலேறி, பினாங்கு, மலாக்கா வழியாக சிங்கை அடைந்ததை லாவணி வடிவில் சொல்கிறது. சிங்கை வந்த கணவனும்…