நூல்கள் வெளியிடுவது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்திற்குப் புதிதல்ல, சுமார் 150 ஆண்டுகளாகப் பழக்கமான ஒன்றுதான். ஆனால், கடந்த தொழிலாளர் தினத்தன்று (மே 1, 2021) சிங்கையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றை அந்த நீண்ட வரிசையில் மற்றொரு நூலாகச் சேர்த்துவிட்டுப் போய்விடமுடியாது. இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக்கழகமும் இணைந்து வெளியிட்டுள்ள ‘ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர் – தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்’ என்பதே அந்நூல். ‘Sojourners to Settlers – Tamils in Southeast Asia…