பதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மெல்பகுலாஸோ. ஆசிரியர் மாதங்கி. திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட இவர் 1993ல் இருந்து சிங்கப்பூரில் வசிப்பவர். நூல் வெளியான ஆண்டு 2014. இந்த ஆண்டு (2016) சிங்கப்பூர் இலக்கியப்பரிசுக்கான போட்டியில், புனைவுப்பிரிவில், இறுதிச்சுற்றுவரை சென்ற தொகுப்பு. நூலை வாசிக்கும்முன் ஒரு அட்டவணை போட்டுக்கொண்டேன். அதில் கதையின் பெயர், வெளியான ஆண்டு, சில வார்த்தைகளில் நிறை-குறைகளாக உணர்வது, பிடித்த கதையா இல்லையா ஆகியவற்றை ஒவ்வொரு கதை வாசித்ததும் நிரப்பிக்கொண்டே வந்தேன். முடித்துவிட்டு அவ்வட்டவணையை ஆராய்கையில் அதிலிருந்து…