ரம்ஜானை முன்னிட்டு உள்நாட்டு போக்குவரத்தை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து அரசு அறிவிக்கும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். ஜோகூரில் உள்ள புலடா ராணுவ முகாமுக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அனுமதிக்குப் பிறகே, உள்நாட்டு போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை அரசு ஏற்கனவே அனுமதித்தபோது 31 கோவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதை மீண்டும் உருவாக்க…