சட்டவிரோதமாக கார் ரேஸில் ஈடுபட்டதாக 30 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் (KUANTAN) நகரில், விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக கார் ரேஸில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இதை கண்காணிக்க முடிவு செய்த போலீசார், ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதிக்கு சென்றனர். தொழிற்சாலை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையில் 250 மீட்டர் நீளத்தை பந்தய தூரமாக வைத்து, கார் ரேஸில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட…

