‘கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்களை மூடியே வாழ்த்துப் பாடு’
இந்தப் பாடல் நம் சிங்கப்பூர் மக்களுக்கு ஏற்ற ஒரு பாடல் என்றே கூற வேண்டும். நம் சிங்கப்பூர் பல கொள்கைகளைக் கொண்ட ஒரு நாடு. அவற்றில் ஒன்று வீடமைப்புக் கொள்கை. சிங்கப்பூரில் உள்ள வீடமைப்புப் பேட்டைகள் அனைத்தும் நான்கின மக்களைக் கொண்டவையாகவே இருக்கின்றன. நம் சிங்கப்பூர் மேம்பட நான்கின மக்களும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதே இக்கொள்கையாகும். நாம் மற்ற இனத்தவரின் கலாசாரத்தைப் புரிந்து கொண்டு செயல்படவும் இத்திட்டம் உதவுகிறது. மேலும், இக்கொள்கையால் நாம் மற்ற இனத்தவர்களுடன் சேர்ந்து வாழும்போது நம்மிடையே ஓர் அழகிய நட்பும் மலர்கிறது.