மருத்துவமனை வளாகத்தில் சித்தப்பாவின் முகம் தெரிந்தது. நான் கைகாட்டியதும் அருகில் வந்தார். அப்பா அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. சித்தப்பாவுக்கு எங்களிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “வாங்க” என்றும் அழைக்க முடியவில்லை “வராதீங்க” என்றும் சொல்லமுடியவில்லை.