200-க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஏ.எஸ்.சி யின்(Anti Scam Center) நடவடிக்கை மூலம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த புதன்கிழமை முதல் வெள்ளி வரை நடந்த மூன்று நாள் நடவடிக்கையின் போது, ஏ.எஸ்.சி.யின் அதிகாரிகள் வங்கிகளுடன் இணைந்து போலி சூதாட்ட தளங்கள் மற்றும் முதலீடுகள் சம்பந்தப்பட்ட மோசடிகளைக் கண்டறிந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான கணக்குகளின் நிதி பரிமாற்றங்களைக் கண்டறிந்து, பரிவர்த்தனைகளைச் செய்த பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, இனிமேல் அவ்வாறு பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். அவர்களில் பலர் மோசடி செய்யப்பட்டதைக்கூட…