புதிதாக அமைக்கப்பட்டுவரும் நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி பாதைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் லீ செய்தி வெளியிட்டுள்ளார். “கல்வியை கோவிட்-19 இன்னும் கடினமாக்கியுள்ளது என்பதை நாம் அறிவோம். இப்போது மார்ச் பள்ளி விடுமுறைகள் தொடங்கியுள்ளன. எனவே, மாணவர்களும் ஆசிரியர்களும் கிடைத்திருக்கும் விடுமுறையை ஓய்வெடுக்கவே பயன்படுத்தவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்வது இப்போது சாத்தியமில்லை என்றாலும், நம் பூங்காக்கள் மற்றும் பசுமையான மிதிவண்டி வழித்தடங்கள் மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நாடாளுமன்றத்தில், தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் மொத்தம்…

