மலேசியாவின் சபா (Sabah) மாநிலத்தில், கடல் மற்றும் ஆறுகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா காரணமாக, பல நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மலேசியாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டல்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள…

