கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் விதமாக சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சமூக விலகல் நடவடிக்கைகளுடன் அமைதியாக நடைபெற்றன. கோயில்களுக்கு வாடிக்கையாக சென்று வழிபடுவது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி கொண்டாடுவது போன்றவை இல்லாமல், வீடுகளிலேயே விருந்து மற்றும் நெருங்கிய குடும்பங்கள், நண்பர்களுடன் வழிபாடுகள் அமைதியாக நடைபெற்றன. விழா வாழ்த்துகளை மக்கள் சமூக ஊடகங்களில் பரிமாறிக்கொண்டார்கள். அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மே 4 வரை மூடப்பட்டிருப்பதாலும், சமூக விலகல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக…

