கொரோனா பரவலுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துவிட்டது. ஆன்லைன் கற்றல் முறை வந்த பிறகு ஆரம்ப வகுப்பில் இருந்து கல்லூரி வரை அதில்தான் எடுக்கிறார்கள், பாடங்களை. நேரில் கற்றுக் கேட்டுப் படித்தப் பிள்ளைகள், இப்போது செல்போன் முன் தவம் கிடக்கிறார்கள், பார்வையை கூர்மையாக்கி. வேறு வழியில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளிலும் இதுதான் நிலைமை. சிலர், சொந்த மற்றும் அலுவகலப் பயன்பாட்டுக்கு என தனித்தனி செல்போன்களை பயன்படுத்தி வரும்போது, மலேசியாவில் ஒரு தாய் தனது…