மலேசியாவில், ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு தினமும் கொரோனா தடுப்பூசிப் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். ஓராண்டுக்குப் பிறகும் கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் முழுமையாக கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா,…