பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை மற்றும் அபராதங்களை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் எப்படித் தருகின்றன என மதிப்பாய்வு செய்த பின், மூன்று வகையான பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை ஒரு வருடம் அதிகரிக்கப்படும் என்று சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றவாளியின் கல்வித் தகுதிகள்/கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு சில வகையான குற்றங்களுக்கான தண்டனையைக் குறைக்கும் வேண்டுகோள்களுக்கு இனி முக்கியத்துவம் தரக்கூடாது என்று அமைச்சர் கே.சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “நீதிமன்றத்திடம் உங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும்,…