கொரோனா காரணமாக, மலேசியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 83.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக, சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம், கொரோனா பரவல் அதிமானதை அடுத்து, பல்வேறு நாடுகள் ஊரடங்கைப் பிறப்பித்தன. இதனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இன்னும், பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்தைத் தொடங்கவில்லை. சுற்றுலாவை முக்கியமாகக் கொண்டுள்ள மலேசியாவும் சர்வதேச விமான போக்குவரத்தை முழுமையாகத் தொடங்கவில்லை. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் வெகுவாகக் குறைந்தது….

