திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் செம்போர்னாவின் தண்ணீர் கிராமத்தில் சுமார் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. மலேசியாவின் சபா மாநிலத்தில் இருக்கிறது, செம்போர்னா தீவு. இதைத் தண்ணீர் கிராமம் என்றும் அழைப்பார்கள். கடலில் மரவீடு கட்டி பலர் இங்கு வசித்து வருகின்றனர். இதனால் இந்த பெயர். இந்த வீடுகளில் ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது. வீடுகளில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டும்…