மலேசியாவின் மூத்த குடிமகள் எனக் கூறப்படும், அன்னம்மா அப்புகுட்டி பாட்டி, தனது 110-வது பிறந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடியிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தச்சம்பாடியை சேர்ந்த அன்னம்மா அப்புக்குட்டி, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மலேசியாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். இன்னும் ஊரை மறக்காத அன்னம்மா, இப்போது வசிப்பது பெராக் மாநிலத்தில் உள்ள பத்து கஜாவில். இப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் பாட்டிக்கு, மெகா குடும்பம். 4 மகன்கள், 17 பேரக்குழந்தைகள், ஏழு பேரன்கள் என சுற்றத்தோடு இருக்கும் பாட்டி,…