மலேசியாவுக்கு 6 லட்சம் டோஸ் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பெறப்பட இருப்பதாக, தேசிய கோவிட்-19 நோய் தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஏற்கனவே பைசர் -பயோன்டெக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போடும் பணி, தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி, அடுத்து பொதுமக்களுக்கும் தொடரும். இந்நிலையில், பிரிட்டிஷ், சுவீடன் நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட…

