தமிழ் முஸ்லிம்கள் பல்வேறு காரணங்களுக்காக சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்திருக்கிறார்கள், மரக்கல நிர்வாகம், சரக்குப் படகுகளை இயக்குதல், கடை உரிமையாளர்கள், தொழிலாளிகள்என்று பல தரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு சிங்கப்பூரின் வளர்ச்சியிலும்,தங்களுடைய சமூக வளர்ச்சியிலும் பல வகைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இதில் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட்ட முத்திரை பதித்த தமிழ் முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த தொழிலில் சிறப்பான இடத்தில் இருக்கும் நாணய மாற்று நிறுவனத்தை…