பிப்ரவரி 7, 1887… மெதாடிஸ்ட் மிஷனின் மலாய் பகுதியின் பொறுப்பாளரான ரெவரண்டு வில்லியம் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஓல்டுஹாம் தென்னிந்திய மிஷன் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் தன் அறிக்கையை சமர்ப்பிக்கிறார். “இங்கே தேவாலய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சீன மாணவர்கள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டு, அங்கு ஐந்து சீன மாணவர்கள் படிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து குடியேறிய 12,000 தமிழர்கள் இப்போது சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் மிஷன் பணிகளைத் தொடங்கிவிட்டோம். தமிழ் மாணவர்களுக்காக நடத்தப்படும் பள்ளியில் 45 மாணவர்கள் படிக்கிறார்கள்”…