கோலாலம்பூரில் உணவகம் ஒன்றிலிருந்து இரண்டு இந்தியர்களைக் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சிலர் வந்தனர். உணவக மேலாளரிடம் பேசிய அவர்கள், திடீரென உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரை தரதரவென வெளியே இழுத்துச் சென்றனர். உணவகத்தில் உள்ளவர்கள் தடுத்தும் அவர்கள் அந்த இரண்டு பேரையும் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட இருவரும் இந்தியர்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விசாரணை…

