மலாக்காவிலுள்ள புக்கே புஸ்ஸார் (இன்றைய புலவ் பசார்) என்ற பெரியமலைப் பகுதியிலுள்ள செய்கு இஸ்மாயிலின் தருகாவுக்கு ஜியாரத்து செய்யச் செல்லும் செவத்த மரைக்காயர் இயற்றிய நூல் இந்த மலாக்கா பிரவேசத் திரட்டு. பாய்மர ஸ்டீமர் கப்பல் மூலம் மலாக்காவை சென்றடையும் கவிஞர், பெரியமலைக்கு ஜியாரத்து செய்யப் புறப்படுகிறார். “பெரியமலைக்குப் போனதும் அதிலுண்டாகி காணப்பட்ட காரணீகமும் செறிந்த தரு” என்றே தலைப்பிட்டு இன்னிசைப் பாடலுடன் இந்தப் பகுதியைத் தொடங்குகிறார். தரு என்ற இன்னிசைப் பாடல் வடிவம் 18ம் நூற்றாண்டில்…