மலேசிய கடல் எல்லைக்குள் 2 படகுகளில் அத்துமீறி நுழைந்ததாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள சண்டாக்கன் பகுதியில் இருந்து எட்டு கி.மீ தூரத்தில் உள்ளது புலாவ் பெர்ஹாலா தீவு. இங்கு மலேசிய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலேசிய கடல் எல்லைக்குள் இரண்டு வெளிநாட்டு படகுகள் அத்துமீறி நுழைந்ததை கண்டனர். வேகமாகச் சென்று அதை வழிமறித்த கடற்படையினர், அதிலிருந்த எட்டுக் குழந்தைகள் உட்பட 75 பேரை கைது செய்தனர். அவர்கள்…