ஹாஜி ஏ.ஜி. முகமது முஸ்தபாவின் மறைவு சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் சமூகத்திற்கு பெரும் இழப்பு. இந்திய முஸ்லீம் மசூதிகள் மற்றும் அவற்றின் சொத்துக்களின் பாதுகாவலராக அவர் இருந்தார் என்று சொல்லலாம். செய்யவே முடியாது என்றே பலர் எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும்கூட, சமூகத்துக்கான தேவை இருக்குமானால், மக்கள் கைவிட்டாலும்கூட, அவர் அதைச் செய்து முடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.