‘நட்பு, காதல், காமம், வாழ்க்கையின் எதார்த்தம், இறப்பின் சோகம், எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் ஓடும்வாழ்க்கை, இப்படி பல கணங்களைப் பதிவு செய்திருக்கிறேன்’ என்ற சித்ரா ரமேஷின் வாக்குமூலம் புனைவுகளில் பளிச்சிடுகிறது. கதைகள் பல இடங்களிலும் சுயதரிசன. நினைவுகளாக ஒருவித வாழ்க்கை வரலாற்று அனுபவங்களாகி, சுயசரிதையாகி விடக்கூடிய சாத்தியக் கூறுகளில் மாட்டிக்கொள்ளாமல் புனைவுகளாகவே அமைத்திருப்பது படைப்பாளியின் சாமர்த்தியம் எனலாம்.