சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் ஆற்றல் மூலங்களை உருவாக்கும் முயற்சியில் சிங்கப்பூர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பசுமை ஆற்றலில் சிங்கப்பூரின் மற்றுமொரு பங்களிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான மிதக்கும் சூரிய பண்ணையைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரதமர் லீ சியன் லூங்.