1966-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பான எஸ்ஐடி (Security and Intelligence Division) வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் செயல்படவும், நமது நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும் அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாகவும் விரைவாகவும் செயல்படுகிறது. இப்போது முதன்முறையாக அதன் வலைதளம் மக்கள் பார்வைக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் இணைந்து தேச நலனுக்காக உழைக்க விரும்புகிறவர்களுக்கான வாசலும் இதன் மூலம் திறக்கப்பட்டுள்ளது.