நாஞ்சில் நாடனை அவருடைய ‘தீதும் நன்றும்’ கட்டுரையை வாசித்துவிட்டு அவரின் மற்ற படைப்புகளை வாசிக்க ஆர்வம் கொண்டவர்கள் பலர். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரை இருக்கும்.