தமிழ் உணர்வோடு அழகியல் சேர்த்து, துணி வோடும் தெளிவோடும் தங்களுடைய கருத்துகளைப் படைப்புகள்மூலம் முன்வைக்கின்ற சிங்கையின் வரிசை கட்டி நிற்கின்ற பெண் படைப்பாளிகள்குறித்து மிகவும் பெருமை அடையலாம். அவர்களின் எழுத்தாற்றலும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்பு வடிவங்களும் கருத்தோவியங்களும் வியக்கவைக்கின்றன.