மூத்தோர் தங்களுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள எந்தவொரு பலதுறை மருந்தகத்துக்கோ, தடுப்பூசி நிலையத்துக்கோ சென்றால் போதும். முன்பதிவு ஏதும் தேவையில்லை.
வீட்டைவிட்டு வெளியேற சிரமப்படுவோருக்கு வசதியாக, சுகாதார அமைச்சு, நடமாடும் தடுப்பூசிக் குழுக்களைக் குடியிருப்புப் பகுதிகளில் பணியமர்த்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதுடன், புதிய இயல்புநிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மூத்தோர் யாரையேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், அன்புகூர்ந்து எனது காணொலிச் செய்தியை அவர்களிடம் காட்டுங்கள்’’ என்று பிரதமர் லீ சியன் லூங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.