கொவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் சிங்கப்பூர் அரசு எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும், மக்களின் பங்களிப்பு குறித்தும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் விளக்கியுள்ளார். குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொள்வதன் மூலம் எந்த அளவுக்கு இயல்புநிலையை எட்ட முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.