அகவை மூப்பின் காரணமாக ஏற்படும் சமூகத் தாக்கங்களிலிருந்து மூத்தோரைக் காக்கும் அறிவுறுத்தல் சமீப காலமாக மேற்கத்திய நாடுகளிலும் குறிப்பாக ஐ. நா. சபையிலும் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாகச் சமீபத்தில் ஐ. நா. சபை, உலக சுகாதார நிறுவனம், மற்றும் மனித உரிமைக்கழகங்கள் சேர்ந்து உலகெங்கிலும் உள்ள 57 நாடுகளில் 83 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி உலகளாவிய அகவைக்கோடல் அறிக்கை (Global Report on Ageism) முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முடிவுகள் கவலையளிப்பதாக உள்ளன.