வீட்டில் தனித்து விடப்பட்ட நான் என் எழுத்தறைக்குச் செல்கிறேன். புத்தகங்களும் இதழ்களும் ஒழுங்கு இல்லாமல் மேசைமேல் சிதறிக் கிடக்கின்றன. மலர் வந்திருந்தால் இப்படியா இருக்கும்? அவள்தான் இந்த மூன்று மாதங்களாக இந்தப் பக்கமே வருவதில்லையே! நானாவது சென்று பார்க்கலாம். ஆனால், அவள் சொன்ன அந்தச் சொற்கள் அங்கு செல்லவிடாமல் தடுத்து விடுகின்றனவே!
நான் அவ்வளவு மென்மையானவனா? இல்லை என் சுய உருவத்தை நானே தரிசிக்கத் தயங்கும் கோழை மனம் படைத்தவனா?

