‘புதுமைதாசன்’ கதைகள் என்னும் கதைத் தொகுதி வெளிவந்த ஆண்டு 1993. தன் பெயரிலேயே புதுமைப்பித்தனை நினைவுபடுத்தும் படைப்பாளி இவர். உண்மையிலேயே சிறுகதை மேதை புதுமைப்பித்தன் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்துலகில் நுழைந்தவர்.
ஒரு கதைத் தொகுப்பைப் படைக்கும் படைப்பாளி, அத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளின் தலைப்புகளில் ஒன்றையே நூல் தலைப்பாகச் சூட்டுவது வழக்கம். ஆனால், புதுமைதாசன் தனது தொகுதிக்கு ‘புதுமைதாசன் கதைகள்’ என்றே பெயர் சூட்டி இருப்பது தன் எழுத்துகளின் மீது அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையையே காட்டுகிறது.