குப்புகளையும் சேர்த்துப் பார்த்தாலும் இது எனக்கு ஆகச்சிறந்த கதையாகத் தோன்றுகிறது. இத்தொகுப்பைப் பொறுத்தவரை எல்லாக் கதைகளிலும் உளவியல் அம்சங்கள் முன்னிற்பதாகப்படுகிறது. அது ஓர் இலக்கியவாதியின் சிந்தனை ஆழப்படுவதன் அடையாளம். மற்ற கதைகளும் வாசிக்கத் தகுந்தவைதாம் என்றாலும் வேதாளத்தின் உயரம் அவற்றைக் குள்ளமாக்கிவிட்டது.