சோப்பின் நுரை கொண்டு இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவிட்டு நிமிர்ந்தாள் நிர்மலா. கண்ணாடியில் இடுப்பு வரையிலான அவள் உருவம் தெரிந்தது. சிறு ஊஞ்சல் போல் முகக் கவசம் அவளின் இரு காதுகளிலும் இருந்து மோவாய்க்குக் கீழே தொங்கியது. மூக்கின் மேல் முகக்கவசம் உண்டாக்கியிருந்த தடம் முகத்தைப் இரண்டாகப் பிரித்திருந்தது. பனிரெண்டு மணிநேர வேலையால் கண்களுக்குக் கீழ் கருமை படர்ந்திருந்தது. அவளது சதையில்லாத கன்னங்கள் மேலும் ஒட்டிப்போய் முகம் நீண்டிருந்தது. தன் அங்கங்களை மெதுவாக அளவிட்டவாறே தனது…